பெண் குழந்தைகள் தின ஓவியப்போட்டியில் தி.கோடு விவேகானந்தா நர்சிங் கல்லூரி மாணவி சிறப்பிடம்

திருச்செங்கோடு, ஜன.29: மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில்,தேசிய பெண் குழந்தைகள் தினம் -2020ஐ முன்னிட்டு மாநில அளவில் சென்னை மருத்துவ பணிகள் இயக்குனரகத்தில் கடந்த வாரம் தேசிய பெண் குழந்தைகள் தின விழா ஓவியப்போட்டி நடந்தது.இதில் தமிழகத்தைச் சேர்ந்த 180 கல்லூரிகளிலிருந்து 2200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திருச்செங்கோடு விவேகானந்தா நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 4ம் ஆண்டு படித்து வரும் சௌமியா 2ம் பரிசு பெற்றார். அவரை விவேகானந்தா மகளிர் கல்வி குழுமங்களின் தலைவர் கருணாநிதி, மேலாண் இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி,  இணை மேலாண் இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்நநாரீஸ்வரன், துணைத்தலைவர் டாக்டர் கிருபாநிதி, செயல் இயக்குனர்  டாக்டர் நிவேதனா, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குனர் வரதராஜன்,  நர்சிங் கல்லூரியின் முதல்வர், அனைத்து ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: