திருச்செங்கோடு நகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி

திருச்செங்கோடு, ஜன.29: திருச்செங்கோடு நகர காவல் துறை, நகர போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கண்காட்சியை பார்வையிட வந்திருந்த பொதுமக்களுக்கு கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த படங்கள்  மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து டிஎஸ்பி சண்முகம் விளக்கி கூறினார். விழிப்புணர்வு நோட்டீஸ்களை அவர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Related Stories: