காயமடைந்த விவசாயி சாவு

சேந்தமங்கலம், ஜன.29: கொல்லிமலை வலப்பூர் நாடு இளமாத்தி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (33) விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (30) இவர்களுக்கு குகன், நதியா என்ற மகன், மகள் உள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட மகன் குகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக டூவீலரில் குடும்பத்துடன் சென்றார். அப்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது கணேசன் ஓட்டி சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. சம்பவ இடத்திலேயே மகள் நதியா உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணேசன், மஞ்சுளா ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: