குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம்

தர்மபுரி, ஜன.29: குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம் வரும் பிப்ரவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் தேர்த்திருவிழா வரும் பிப்ரவரி 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 8ம் தேதி தைப்பூசத்தன்று வள்ளி தேவசேனா சிவசுப்ரமணியசுவாமி திருக்கல்யாணம், 9ம் தேதி விநாயகர் ரதம், 10ம் தேதி சுப்ரமணியர் மகா ரதம் எனும் தேர்திருவிழா நடக்கிறது. 12ம் தேதி சிவசுப்ரமணிய சுவாமி தெப்ப உற்சவம், 13ம் தேதி சயன உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: