தர்மபுரி, ஜன.29: தர்மபுரி ஒன்றிய அதிமுக சார்பில், எம்ஜிஆர் 103வது பிறந்தநாளை முன்னிட்டு நீலாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை வகித்து பேசினார். தர்மபுரி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் தகடூர் விஜயன், குருநாதன், செந்தில்ராமச்சந்திரன் கலந்து கொண்டனர்.