வாலிபர் தற்கொலை

அவிநாசி, ஜன.29: பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் வாரணாசிபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் சதீஷ்(25). இவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் பொறியியல் பட்டம் பயின்று முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்துள்ளார்.

இருப்பினும் உரியவேலை எதுவும் கிடைக்காததால், மனமுடைந்தார். இந்நிலையில், காளிபாளையம் அருகே புதுப்பாளையம் சென்று வருவதாகக் கூறிச் சென்றார். அங்கு நேற்று காலை விஷம் அருந்தி, தோட்டத்தில் உள்ள நீரில்லா தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் சதீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: