பனியன் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், ஜன.29: திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார்(39).  பனியன் ெதாழிலாளி. இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும் மகன்களும் உள்ளனர். குடிபழக்கத்திற்கு அடிமையான சதீஸ்குமார் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் பிரச்னை ஏற்பட்டு கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வனிதா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஸ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: