புதுச்சேரி, ஜன. 29: புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், மத்திய அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் செயல்படும் திட்டம் செயல்படுத்தல் நிறுவனம் (பிஐஏ) மூலம் உலக வங்கி நிதி ஆதாரத்தின் உதவியுடன் ரூ.250 கோடி வரை மாநில அரசுக்கு நிதி வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் புதுச்சேரி கடற்கரை சாலை மேரி கட்டிடம், தேங்காய்த்திட்டு துறைமுக வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பழைய மேரி கட்டிடம் அதே தரத்தில் ரூ.14.83 கோடி செலவில் கட்டப்படுகிறது. தொடக்கத்தில் தரமான முறையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டு வருகிறது. இதில் நடந்த ஊழல் தொடர்பாக, மேரி கட்டிடத்தின் பார்வையாளராக இருந்த பொறியாளருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.