காரைக்கால், ஜன. 29: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் அம்பகரத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறுவர்களுடன், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை அம்பகரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தொடங்கி வைத்து பேசும்போது, இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிக அவசியம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக அதிகமான விழிப்புணர்வு பல்வேறு தரப்பின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பில் குழந்தைகள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் உரிய கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது நல்ல பயனைத்தரும்.