சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

திருக்கோவிலூர், ஜன. 29:  திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலபந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (32). இவர் தனது தந்தை மாணிக்கம், தாய் மாரிமுத்து ஆகியோருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் குழந்தைவேலு பெங்களூரில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். குழந்தைவேலுக்கு சொந்தமாக திருப்பாலபந்தல் பள்ளி அருகே வீடு உள்ளது. ஜெயபால் கடந்த 3 வருடமாக பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் மண்சுவர் இடிந்து ஜெயபால் தலை மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார். இதுகுறித்து திருப்பாலபந்தல் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: