கள்ளக்குறிச்சி விற்பனை கூடத்திற்கு தானியங்கள் வரத்து அதிகரிப்பு: 1.27 கோடியில் கொள்முதல்

கள்ளக்குறிச்சி, ஜன. 29:கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானிங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று 722 விவசாயிகள், 2607மூட்டை தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்திருந்தனர். இந்நிலையில் நேற்று உளுந்து திடீரென வரத்து அதிகரித்து இருந்தது. அதில்  900மூட்டை மக்காச்சோளம், 1500 மூட்டை உளுந்து, 30 மூட்டை மணிலா, 100 மூட்டை வரகு மற்றும் தட்டைப்பயிர், பச்சைபயிர் உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டுவரபட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.  

    

100 கிலோ எடைகொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.1650க்கும், அதிகபட்சமாக ரூ.1841க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.6796க்கும், அதிகபட்சமாக ரூ.7385க்கும் விற்பனையானது. மணிலா ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.5209க்கும், அதிகபட்சமாக ரூ.6333க்கும் விற்பனை செய்யப்பட்டது. எள் ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.7299க்கும், அதிகபட்சமாக ரூ.8599க்கும் விற்பனையானது. வரகு ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.1640க்கும், அதிகபட்சமாக ரூ.1820க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் தானியங்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.  நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ. 1 கோடியே27 லட்சத்து 75 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: