நெய்வேலி, ஜன. 29: நெய்வேலி அடுத்த வடக்குமேலூர் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால், இ-சேவை மைய அலுவலகத்தில் இந்த அலுவலகம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நெய்வேலி டவுன்ஷிப் நகர் பகுதிகள் வட்டம் 1 முதல் 30 வரை, மாற்று குடியிருப்புகள், சிலோன் குடியிருப்புகள், இந்திரா நகர், வடக்கு மேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், என்எல்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வாடகை கட்டணம் செலுத்த முடியாத பிரச்னையால் வடக்கு மேலூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு மக்கள் செல்ல வேண்டுமென்றால் கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள வடக்குத்து பஸ் நிறுத்தம் இறங்கி, ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும்.
இல்லையெனில் நெய்வேலி டவுன்ஷிப் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்,