நாங்குநேரியில் கஞ்சா கடத்திய தந்தை, மகன் கைது

நாங்குநேரி, ஜன.28:   தேனியிலிருந்து நாங்குநேரிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து  சப்.இன்ஸ்பெக்டர் சஜீவ் மற்றும் போலீசார் நாங்குநேரி பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையிலிருந்து திசையன்விளை செல்லும் அரசு பஸ்சில் வந்த நாங்குநேரி தம்புபுரத்தைச் சேர்ந்த பழனி (55) அவரது மகன் துரைப்பாண்டி(25) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் பதுக்கி வைத்திருந்து 1.25 கிலோ கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து வழக்குப்பதிந்து பழனி மற்றும் துரைப்பாண்டியை கைது செய்து சிறையிலடைத்தனர். போலீசாரைக் கண்டதும் பஸ்சிலிருந்து தப்பியோடிய பழனி மனைவி சுப்பம்மாவை தேடி வருகின்றனர்.

Related Stories: