நாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் மனு

தூத்துக்குடி, ஜன.28: புதூர் ஒன்றியம் நாகலாபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் குடும்பன், பண்ணாடி, வாத்திரியன், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட 7 உட் பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசு ஆணை பிறப்பித்து எஸ்சி பட்டியலிலிருந்து வெளியேற்ற கிராமசபை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் செண்பகக்கனி, ஒன்றிய செயலாளர் புதூர் பெருமாள், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஜெயமுருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: