தூத்துக்குடி,ஜன.28: ஜனநாயக தரைவழிப்போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் பொதுத்தொழிலாளர் நலச்சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகாயம் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:
தூத்துக்குடி-மதுரை இடையே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நான்குவழிச்சாலையில் சிப்காட்-துறைமுகம் பைபாஸ் சாலையில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகில் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியில் மட்டுமே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் மற்றொரு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் பலவருடங்களாகியும் இன்னும் நிறைவடையவில்லை.