காரைக்கால், ஜன. 28: இலவச அரிசி வழங்கக்கோரி வரும் 31ம் தேதி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூ., அறிவித்துள்ளது.காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், வட்ட செயலாளர் தமீம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், திவ்யநாதன், ராமர், பாக்கியராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட் கூறும்போது, புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. நிறைவேற்றும் எண்ணம் இருப்பதாகவும் தெரியவில்லை. காரணம், ஆட்சி அதிகாரம் யாருக்கு என்பதில், கவர்னரும், முதல்வரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இதனால் மக்கள் நலத்திட்டம் முடங்கி கிடக்கிறது.
குறிப்பாக,