முந்திரி தோப்பில் முதியவர் சடலம்

பண்ருட்டி, ஜன. 28: பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்ருட்டி அருகே சொரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர், கடந்த 22ம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் ஆறுமுகம் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற முத்தாண்டிக்குப்பம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: