விருத்தாசலத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் வசந்த் (20). இவர் விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு கல்லூரியில் குடியரசு தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் மாணவர்களான விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்த செல்வம் மகன் கார்த்திக் (23), வேலு மகன் பாஸ்கர் (23), ஹசா, ஏழுமலை ஆகிய 4 பேரும் வசந்த்தை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வசந்த் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக், பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடிவருகின்றனர்.

Related Stories: