கடலூர், ஜன. 28: வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் கடலூர் வட்டாரம் சங்கொலிக்குப்பம் கிராமத்தில் ராமலிங்கம் என்ற முன்னோடி தென்னை விவசாயியின் வயலில் தென்னை நார் கழிவை மக்க வைத்து உரமாக்குவது குறித்த செயல்விளக்கம் நடத்தப்பட்டது. தென்னை நார் கழிவுகளை 4 அடி நீளம், 3 அடி அகலத்திற்கு 3 அங்குல உயரத்திற்கு பரப்பியபின் நன்றாக நீர் தெளித்து ஈரப்படுத்தப்பட்டது. பின் 1 கிலோ யூரியாவை இந்த அடுக்கின் மேல் தூவப்பட்டது. இதற்கு அடுத்து இரண்டாம் அடுக்காக தென்னை நார் கழிவு பரப்பப்பட்டது. இதன் மேல் பிளிரோட்டஸ் பூசன வித்துக்கள் பரப்பப்பட்டது. இதேபோல் தென்னை நார்கழிவு மற்றும் யூரியா அடுத்த அடுக்கில் பரப்பப்பட்டது. இதன் மேல் மற்றும் ஒரு அடுக்கில் நார்கழிவு மற்றும் பூசன வித்து பரப்பப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த அடுக்குகளில் யூரியாவையும், பூசன வித்துக்களையும் மாறி மாறி பரப்பப்பட்டது. இந்த கழிவுக்கு வியலை 5 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட ஆலோசனை அளிக்கப்பட்டது. இதனால் புதிய காற்று உட்சென்று ஏற்கனவே அங்கு உபயோகப்படுத்தப்பட்ட காற்றை வெளியேற்றுகிறது. இந்த மட்கவைத்தல் காற்றின் உதவியால் நடைபெறுகிறது. ஏனெனில் மட்கவைத்தலுக்கு உதவும் நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு பிராணவாயு அவசியம். எனவே குவியலை கிளறிவிடுதல் மறைமுகமாக நல்ல காற்றோட்டத்திற்கு உதவுகிறது.