திருச்சுழி, ஜன.28: திருச்சுழி அருகே அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை துப்புரவு பணியில் ஈடுபட்ட நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் மன்றத்தினர் சுத்தம் செய்தனர். திருச்சுழி அருகே உள்ள கம்பாளியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் மாணவர்கள் விளையாட முடியாத நிலையில் இருந்தது. இந்த விளையாட்டு மைதானத்தை இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா, கம்பாளி கிராமத்தைச் சேர்ந்த எஎஸ்கே இளைஞர் மன்றம் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யப்பட்டது.