சாத்தூர், ஜன.28: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் காணிக்கையாக ரூ.34 லட்சம் கிடைத்தது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். அதனை தொடர்ந்து நேற்று ஒரு கால்நடை உண்டியல். ஒரு அன்னதான உண்டியல் மற்றும் 10 நிரந்தர உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கிடப்பட்டன. அதில் ரொக்கமாக 34 லட்சத்தி 77 ஆயிரத்தி 585 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கையை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதில் தங்கம் 85 கிராம் 300 மில்லி, வெள்ளி 319 கிராம் 300 மில்லி கிடைத்தது.