சீர்காழி, ஜன.27: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் முதன்முறையாக பெண் ஒன்றியக்குழு தலைவர் தேசியக்கொடி ஏற்றி வைத்து, அவரது தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நாகை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றியகுழு தலைவராக ஒரு பெண் இருந்ததில்லை. முதன்முறையாக நடந்து முடிந்த ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் கமலஜோதி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல் ஒன்றியக்குழு தலைவர் என்ற பெருமை கமலஜோதிக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.