சில்வார்பட்டி வீரையா கோவில் மூன்றுரோட்டில் இருந்து சந்தனம் கோவில்வரை சாலை அமைக்கும் பணி

தேவதானப்பட்டி, ஜன.28: சில்வார்பட்டி வீரையா கோவில் மூன்றுரோட்டில் இருந்து  சந்தனம் கோவில்வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையை பெயர்த்து அதன் மேல் சல்லி கலவையை போட்டுள்ளனர். சல்லி கலவையை போட்டு ஒரு வாரம் ஆன நிலையில் இன்னும் சாலை அமைக்கும் தொடங்கவில்லை. இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் சாலையின் இருபுறம் உள்ள வீடுகள் புழுதியால் பாதிப்படைகிறது. மேலும் பேருந்து, கார் போன்ற வாகனங்கள் செல்லும் போது டூவீலர் மற்றும் சைக்கிளில் செல்வோர்கள் புழுதியால் பாதை தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். மேலும் சாலையில்  எழும் புழுதியால் சாலையோர வீடுகளில் வசிப்பவர்களுக்கு தூசியால் அலர்ஜி, தும்மல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சில்வார்பட்டியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: