மண்டபம் யூனியன் பகுதியில் குடியரசு தினம் கோலாகலம்

மண்டபம், ஜன.28:  மண்டபம் யூனியன் பகுதியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உச்சிப்புளியில் உள்ள மண்டபம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆணையாளர் சேவுகப்பெருமாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அலுவலக மேலாளர் ராமநாதன் வரவேற்று பேசினார். விழாவில் யூனியன் துணைத் தலைவர் பகவதி லட்சுமி ஒன்றிய கவுன்சிலர்கள் காளீஸ்வரி விஸ்வநாதன் தவ்பீக் அலி, கண்ணன், நித்தியா சுகந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் உதவியாளர் முனியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: