குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, ஜன.28: முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி உறுதிமொழியேற்று ஆர்ப்பாட்டம் நேற்று மாலை ஆசாத்நகரில் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் செல்லத்துரை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி கலந்துக்கொண்டு உறுதிமொழியேற்று ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். இதில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பவேண்டும் என்றும், மத்திய மாநில அரசுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து நாட்டின் அணைத்து தரப்பு மக்களின் ஒற்றுமையை போற்றி உறுதிமொழியேற்றனர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உப்பூர் ராஜேந்திரன், வீரமணி, வீரசேகரன், கிளை செயலாளர் காளிமுத்து உட்பட நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: