பாபநாசம், ஜன. 28: பாபநாசம் அண்ணா சிலை அருகே வட்டார அனைத்து இஸ்லாமிய மஹல்லா ஜமாஅத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள் குடியுரிமையை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காயல் மஹபூப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் காதர் உசேன், பெரியார் திராவிட கழக எழுத்தாளர் மணிமாறன், அமமுக பேச்சாளர் பரணி கண்டன உரையாற்றினர்.