கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் அரவக்குறிச்சி பகுதியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

அரவக்குறிச்சி, ஜன. 28: அரவக்குறிச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாட்டின் 71வது குடியரசு தினம் அரவக்குறிச்சி பகுதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. புங்கம்பாடி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் ஜெனிபர் கொடியேற்றி வைத்தார். நீதிமன்ற பணியாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழுத்தலைவர் வள்ளியாத்தாள் குருசாமி கொடியேற்றி வைத்தார். ஒன்றிய ஆணையாளர் சரவணன், சுப்பிரமணி உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி ஆறுமுகம் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அரவக்குறிச்சி மகளிர் உயர்நிலைப்பள்ளி, மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அரவக்குறிச்சி பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள். மற்றும் தனியார் பள்ளிகளிலும் 71 வது குடியரசு தினத்தை கொடி ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

Related Stories: