சிவாடி ரயில்வே கேட்டில் சுரங்க நுழைவு பாலம் கட்டுமான பணி தீவிரம்

தர்மபுரி, ஜன.28: தர்மபுரி அருகே சிவாடி ரயில்வே கேட்டில், சுரங்க நுழைவு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி வழியாக சேலம்-பெங்களூரு ரயில்பாதை செல்கிறது. இந்த ரயில் பாதை வழியாக, தினமும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. நல்லம்பள்ளியில் இருந்து சிவாடி ரயில்வே கேட்டை கடந்து கந்துக்கால்பட்டி, கோபாலம்பட்டி, நார்த்தம்பட்டி, பூதனஅள்ளி, இலளிகம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதனால், அடிக்கடி ரயில்கள் செல்லும்போது ரயில்வே கேட் பூட்டப்படுவதால், இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, இந்த பகுதியில் ரயில்பாதையை கடக்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தென்மேற்கு ரயில்வே துறை மூலம் ₹1 கோடி மதிப்பில், சிவாடி ரயில்வேகேட் அருகே சுரங்க நுழைவு பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Related Stories: