திருவண்ணாமலை, ஜன.28: திருவண்ணாமலையில் சரக்கு லாரி கோயில் மீது மோதிய விபத்தில் கோயிலின் முன்பகுதி சேதமடைந்தது. திருவண்ணாமலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தையொட்டி உள்ள தண்டராம்பட்டு சாலையோரம் உள்ள கோயில் முன்பகுதியில் நேற்று காலை மணலூர்பேட்டை சாலை மார்கமாக இருந்து திருவண்ணாமலை நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்தது. அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபர் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத லாரி டிரைவர் லாரியை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த கோயில் மீது மோதி நிறுத்தினார். பைக்கில் வந்த நபருக்கு படுகாம் ஏற்பட்டு, பைக் லாரியின் அடியில் சிக்கியது.