கலசப்பாக்கம், ஜன.28: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். துரிஞ்சாபுரம் ஒன்றியம் வி.நம்மியந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் இப்பள்ளியை சேர்ந்த 45 மாணவர்கள் பங்கேற்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விளக்கினர்.