திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலை மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்ட தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் உட்பட 24 பதவி இடங்களுக்கான மறைமுகத் தேர்தல் வரும் 30ம் ேததி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட, ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. இதில், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் தேர்தலின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.அதேபோல், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் வாக்கெடுப்பில் பங்கேற்க மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர். 11 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்ற நிலையில், போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், கலசபாக்கம், போளூர், புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் வாக்ெகடுப்பில் பங்கேற்க போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத காரணங்களால் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.