சேத்துப்பட்டில் துணிகரம் 2 டாஸ்மாக் கடைகளில் திருட முயற்சி போலீசார் விசாரணை

சேத்துப்பட்டு, ஜன.24: சேத்துப்பட்டில் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். சேத்துப்பட்டு பேரூராட்சி, வந்தவாசி சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையாளர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபானம், பணம் எதுவும் திருட்டு போகவில்லை. நள்ளிரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம ஆசாமிகள், போலீசார் ரோந்து வருவதை அறிந்ததும் முயற்சியை கைவிட்டு, தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: