சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் தங்கம் பறிமுதல்: 11 லட்சம் கரன்சியும் சிக்கியது

சென்னை: துபாயில் இருந்து பயணிகள் விமானம் நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சாகிப் அப்துல்லா மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்க செயின்களை கடத்தி வந்தது தெரியவந்து. இதேப்போல், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், பயணி அப்துல் பசித் என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 44 லட்சம் மதிப்புள்ள 1.13 கிலோ தங்கை நகைகள் கடத்தி வந்தது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்தனர்.அதே விமானத்தில் சென்னை வந்த சையது முகமது மற்றும் சபீர் அமகது ஆகியோர் 11.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: