புதுச்சேரி, டிச. 5: உழவர்கரை நகராட்சி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜவகர் நகர், மேரி உழவர்கரை மற்றும் விவிபி நகர் ஆகிய இடங்களில் செயல்படும் உழவர்கரை நகராட்சி அலுவலக தினசரி தூய்மைப்படுத்தும் பணியினை 3 சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 5 மகளிர் பயன் பெறுகின்றனர். இப்பணியினை இவர்கள் ஒரு மாதமாக சிறப்பாக செய்து வருகின்றனர்.