புதுச்சேரி, டிச. 5: புதுவை தொழிலதிபர் வீட்டில் தங்க நாணயங்கள் திருட்டு போன வழக்கில் வேலைக்கார பெண், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளியை கண்டுபிடிக்க செல்போன் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். புதுச்சேரி, உழவர்கரை பிரண்ட்ஸ் நகரை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி, தொழிலதிபர். இவரது மனைவி ஜெயந்தி (57). டெல்லியில் வசிக்கும் மகனை பார்த்துவிட்டு ஒரு மாதத்திற்குபின் தம்பதியர் வீடு திரும்பினர். இதனிடையே கடந்த வாரம் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்க பீரோவை ஜெயந்தி திறந்து பார்த்தபோது அதிலிருந்த தங்க நாணயங்களை 10 பவுன் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் ஜெயந்தி புகார் அளித்தார்.