இளம்பெண் தீக்குளித்து சாவு

செஞ்சி, டிச. 5: விழுப்புரம் அடுத்த நல்லா பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் அமலா (18). பெங்களூரில் தந்தையுடன் தங்கி தனியார் பள்ளியில் படித்து வந்தார். அங்கு யாரையோ காதலிப்பதாக கேள்விப்பட்டு அமலாவை சொந்த வீடான நல்லாபாளையத்திற்கு அனுப்பிவிட்டனர். கடந்த ஒன்றரை மாதமாக தாயுடன் வசித்து வந்த அமலா கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பலன் அளிக்காமல் இறந்துபோனார். இதுகுறித்து கஞ்சனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: