புவனகிரி, டிச. 5: டிசம்பர் 6ம் தேதி(நாளை) பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ரயில்வே போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில், போலீசார் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பின்னர் ரயில்வே நடைபாதையில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.