சிவகாசி பஸ்நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் ஒன்று விருதுநகருக்கு கிளம்பியது. பஸ்நிலையம் அருகே அரசு பஸ்சின் பின்புற கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீசார் வழகுப்பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி, முனியாண்டி, மணிகண்டன், மாரியப்பன், பெருமாள், ராம்குமார், ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.