அருப்புக்கோட்டையில் இருந்து பந்தல்குடி கொப்பு சித்தம்பட்டிக்கு நேற்றிரவு டவுன் பஸ் சென்றது. அப்போது மர்ம நபர்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை நொறுங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிந்து, பந்தல்குடியை சேர்ந்த கணேசமூர்த்தி (25), ஜெகதீஸ்வரன் (30), ஜெயக்குமார்(25) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.