திருச்சுழியில் 3 பேர் கைது:

திருச்சுழி அருகே, கல்லூரணியில் சில தினங்களுக்கு முன், அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல் வீசினர். இதில், பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அரசு பஸ் டிரைவர் அருப்புக்கோட்டை ராஜன்,  ரெட்டியபட்டி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், சிலுக்கப்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் (27), கல்லூரணியைச் சேர்ந்த முனியசாமி (38), மணிகண்டன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, நேற்று முன்தினம் இரவு    அருப்புக்கோட்டையில் இருந்து சாயல்குடிக்கு  சென்ற அரசு பஸ்சில், திருச்சுழி சவ்வாஸ்புரம் அருகே  கல்வீசி தாக்கினார். இதனால், முகப்பு கண்ணாடி உடைந்தது. இது குறித்து திருச்சுழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: