திருவில்லிபுத்தூர், டிச.5: திருவில்லிபுத்தூர் ஓட்டமடம் பகுதியில் மணல் குவிக்கப்பட்டு இருப்பதாக, தாசில்தார் கிருஷ்ணவேணிக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் பால்துரை மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை செய்தனர். அப்போது ஓட்டமடம் பகுதியில் மணல் குவியல், குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மணல் குவியலை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.