திருச்செங்கோடு, டிச.5: திருச்செங்கோடு அருகே பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் எழும் கடும் புகை மூட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். திருச்செங்கோடு அருகே உள்ளது சத்திய நாயக்கன்பாளையம். இக்கிராமத்தில் உள்ள ஏரி வறண்டு தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் இந்த ஏரியில் ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் கோழிக்கழிவுகளை இரவு நேரத்தில் லாரிகளில் கொண்டு வந்து குவித்து விட்டு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று சிலர் இந்த குப்பை கழிவுகளுக்கு தீ வைத்து விட்டு சென்றனர்.