காளையார்கோவில், டிச.5: காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் நகர் வர்த்தக சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் நலன் கருதி நகர் வர்த்தக சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர் வர்த்தக சங்கத் தலைவர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜான்போஸ்கோ, மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, கவுரவத்தலைவர் நாகராஜன், சங்க ஆலோசகர் ரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.