சூளகிரி, நவ.5: சூளகிரி அருகே தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பாத்தகோட்டா தென்பெண்ணையாற்றில் சுமார் 50 வயது பெண் சடலமாக மிதந்து கிடந்தார். இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் மோகன், வருவாய் அலுவலர் மங்கையர் கரசிக்கும் தகவல் அளி்த்தனர். இதன்பேரில் போலீசார் மற்றும் வருவாய் அலுவலர் தென்பெண்ணையாற்று பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஆற்றில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.