கமுதி, டிச.5: கமுதி அருகே ஊரணியில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கமுதி அருகே முஷ்டகுறிச்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் மின் கம்பம் ஒன்று மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் வழியே இந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு மின்விநியோகம் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஊரணியில் தண்ணீர் இருப்பதால் குளிக்க வருபவர்கள் அச்சத்தில் வருகின்றனர். விடுமுறை தினத்தன்று குளிக்க வரும் சிறுவர்களுக்கும் ஆபத்துதான்.