தர்மபுரி, நவ.5: டெல்லி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கடந்த 2ம் தேதி வழக்கறிஞர்களை போலீசார் தாக்கினர். மேலும், தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. காயமடைந்த வக்கீல்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கூட்டுக்குழு சார்பில், நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.