டெல்லி சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தர்மபுரி, நவ.5: டெல்லி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், கடந்த 2ம் தேதி வழக்கறிஞர்களை போலீசார் தாக்கினர். மேலும், தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன. காயமடைந்த வக்கீல்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கூட்டுக்குழு சார்பில், நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து மொத்தம், 650 வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Stories: