டைமிங் பிரச்னையால் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்

பாப்பாரப்பட்டி, நவ.5: பாப்பாரப்பட்டி அருகே டைமிங் பிரச்னையால் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரிக்கு இரண்டு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பேருந்து காலை 7.40 மணிக்கும், மற்றொன்று காலை 7.42 மணிக்கும் இயக்கப்படுகிறது. நேற்று காலை பாப்பாரப்பட்டிக்கு 7.42க்கு வரும் பேருந்து முன்னதாகவே வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. இதனை பார்த்த 7.40க்கு வரும் பேருந்து டிரைவர் அந்த பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிரைவர்கள் இருவரும் பேருந்தினை பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் இருதரப்பினரிடமும் பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

Related Stories: