வத்தலக்குண்டு, டிச. 5: வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் பட்டுப்போன மரத்தால் நோயாளிகள் அச்சமடைந்து உள்ளனர். இதை உடனே அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டுவில் அரசு மருத்துவமனை உள்ளது. இதனை வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 30000க்கும் மேற்பட்டோரும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு தினசரி சிகிச்சைக்காக 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த ஒரு ஆண்டாக இரண்டு பட்டுப்போன நீலகிரி தைல மரங்கள் இருந்தன. இவற்றை அகற்றுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஒரு வழியாக ஏற்று பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவினர் கடந்த சில மாதங்களுக்கு ஒரு மரத்தை அகற்றினர். ஆனால் மற்றொரு மரத்தை விட்டு விட்டு சென்று விட்டனர். தற்போது அந்த பட்டுப்போன மரம் மேலும் காய்ந்து பலத்த காற்று அடிக்கும் போது ஆடுகிறது.