திருச்சி, டிச.5: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்பிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.எய்ட்ஸ் பற்றிய ஓர் விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் இளையோருக்கு எய்ட்ஸ் நோய் வராமல் தடுத்தல், நோயால் ஏற்படும் ஆபத்தை உணர்த்துதல், இளைஞர்களிடையே தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்பிற்கு தேசிய விருதினை வழங்கியுள்ளது. உலக எய்ட்ஸ் தினமான டிச.1ம் தேதி, புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர், மருத்துவர் ஹர்ஷவர்தன், பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் இலக்குமிபிரபாவிடம் விருதிற்கான சான்றிதழையும் நினைவுப் பரிசையும் வழங்கினார்.