முன்னேற்பாடுகள் மும்முரம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, டிச.5:தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.திருத்துறைப்பூண்டி வட்டம் குன்னூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் என்ற பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊர் குளத்தின் கரையிலேயே அமைக்கப்பட்ட கைபம்பை சுற்றி மழைக்காலங்களில் தண்ணீர் சூழ்ந்து விடுவதால் குடி தண்ணீர் எடுக்க இடுப்பளவு தண்ணீரில் பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மக்களின் சிரமத்தை அறிந்த திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து குடிநீர் தேவையை ஆய்வு செய்து மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேற்று டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.மேலும் குரும்பல் ஊராட்சிக்குட்பட்ட கச்சாலபுரம் பகுதியிக்கும் டேங்கர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. கஜா புயலுக்கு பிறகு தற்போது தான் டேங்கர் லாரி மூலம் குடிநீர் பெற்றதாக தெரிவித்தனர். தற்போது வரை 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குரும்பல் சென்று தான் குடிநீர் எடுத்து வருவதாக கவலையாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: